தனியார் கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

333 0

அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை தற்காலிகமாக மூடப்படும் என, கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார். 

1 ஆம் தவனைக்காக விடுமுறை வழங்கப்பட்டுள்ள பாடசாலைகள் இன்று ஆரம்பிக்கவிருந்த நிலையில் நேற்று ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை அடுத்து பாடசாலைகள் நாளை வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளன. 

இந்நிலையில் அனைத்து தனியார் கத்தோலிக்க பாடசாலைகளின் 2 ஆம் தவனைக்கான நடவடிக்கைகளும் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என கத்தோலிக்க தனியார் பாடசாலைகளின் பொது முகாமையாளர் வணக்கத்திற்குரிய ஐவன் பெரேரா தெரிவித்துள்ளார்.