இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது – தமிழிசை சௌந்தரராஜன்

334 0

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது என்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சாதிக் கலவரத்தை தூண்டுவோர் யாராக இருந்தாலும் இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும். மதுரையில் வாக்கு இயந்திர அறைக்குள் அனுமதியின்றி அதிகாரி சென்றது பற்றி விசாரண நடத்த வேண்டும். 

பெண் வட்டாட்சியரை ஆளுங்கட்சி அனுப்பி வைத்தது போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்குகின்றன. இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் துரதிருஷ்டவசமானது. அங்கு அமைதி திரும்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.