வெளிநாடொன்றில் கோர விபத்தில் சிக்கி உயிர்விட்ட இலங்கையர்!

245 0

சவூதி அரேபியாவில் இடம்பெற்ற கோர விபத்தில் அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருதமுனை பகுதியை சேர்ந்த முகம்மட் ரிஹாஸ் உவைஸ் என்ற இளைஞரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மேலும், விபத்தில் சிக்கிய மருதமுனையை சேர்ந்த மேலும் இருவர் ஆபத்தான நிலையில் சவூதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்று விடுமுறை நாள் என்பதால் உணவு உண்பதற்காக இவர்கள் மூவரும் சவூதி அதிவேகப்பாதை வழியே சென்று கொண்டிருக்கும் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

பின்னால் வந்த கார் இவர்கள் சென்ற வாகனத்துடன் மோதியதால் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் சிக்கிய மூவரூம் மருதமுனையை சேர்ந்தவர்கள். ஒருவர் சம்பவ இடத்தில் உயிரழந்துள்ளார்.

ஏனைய இருவரில் ஒருவரின் கால் ஒன்று அகற்றப்பட்டுள்ளது எனவும், மற்றையவர் கோமா நிலையில் இருக்கின்றார் எனவும் தெரியவருகின்றது.

இவ்விபத்து தொடர்பில் சவூதி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share this: