புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பியது-புகையிரத திணைக்களம்

243 0

புகையிரத சேவை இன்று வழமை போன்று இடம்பெறுவதாக புகையிரத திணைக்களம் கூறியுள்ளது. 

நேற்று புகையிரதம் தடம்புரண்டதால் புகையிரத போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் இன்று வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.எஸ். பொல்வத்தகே கூறினார். 

கொழும்பில் இருந்து அவிஸ்ஸவெல்ல நோக்கி பயணித்த புகையிரதம் கிருலப்பனை பகுதியில் தடம் புரண்டதுடன், காலியில் வைத்து காலுகுமாரி புகையிரதமும் தடம் புரண்டதாக அவர் கூறினார். 

எவ்வாறாயினும் தற்போது புகையிரத போக்குவரத்து வழமைக்கு திரும்பிவிட்டதாக புகையிரத போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.எஸ். பொல்வத்தகே கூறினார்.