முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை ஆரம்பம்-கல்வி அமைச்சு

234 0

முஸ்லிம் பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை நாளை (17) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

அத்துடன் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகள் கடந்த 5 ஆம் விடுமுறை வழங்கப்பட்டதுடன் முஸ்லிம் பாடசாலைகள் கடந்த 11 ஆம் திகதி விடுமறை வழங்கப்பட்டிருந்தது. 

இதேவேளை அனைத்து பாடசாலைகளிலும் புதிய தவணையை ஆரம்பிப்பதற்கு முன்னர் டெங்கு ஒழிப்பு திட்டத்தை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.