வவுனியாவில் பெண்கள் அமைப்பால் கவனயீர்ப்புப் போராட்டம்(காணொளி)

434 0

வவுனியாவில் சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று நடைபெற்றது.

இக் கவனயீர்ப்பு பேரணியானது வடக்கு மாகாண பெண்கள் மறுசீரமைப்பு பரிந்துரை வலையமைப்பு அமைப்பினரால் பாதிக்கப்பட்ட சிறுவர் மற்றும் பெண்களுக்கான நீதியை துரிதப்படுத்துமாறு கோரிக்கைகளுடன் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச பெண்கள் மற்றும் சிறுவர் தினத்தை முன்னிட்டு இன்று கவனயீர்ப்பு பேரணியானது வவுனியா தபால் நிலையத்திற்கு முன்பிருந்து ஆரம்பமாகி வவுனியா மாவட்ட செயலகத்தை வந்தடைந்ததும், அங்கு அரசாங்க அதிபர் எம்.பி.றோகண புஸ்பகுமாரவிடம் மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.

இம் மகஜர்  மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக ஜனாதிபதிக்கும், சட்ட மா அதிபர் திணைக்களகத்திற்கும். மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்கும், வடமாகாண முதலமைச்சருக்கும், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கும் அனுப்பி வைக்குமாறு வடக்கு மாகாண பெண்கள் மறுசீரமைப்பு பரிந்துரை வலையமைப்பு அமைப்பினரால் கையளிக்கப்பட்டது.