இசை நிகழ்விற்கு செல்ல முற்பட்ட இளைஞன் பலி

167 0

கொலன்ன, கஸ்தானகஹவத்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்விற்கு செல்வதற்காக தயாராக இருந்த இருவரை மோட்டார் சைக்கிள் வந்த இருவர் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

இதன்போது பலத்த காயமடைந்த இளைஞன் கொலன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளான். 

17 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான். 

சம்பவம் தொடர்பில் கொலன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.