இன்றும் நாளையும் அதிவேக பாதையில் விசேட ஏற்பாடு- எஸ்.ஓபநாயக்க

197 0

புத்தாண்டுக்காக வீடுகளுக்குச் சென்று மீண்டும் நகரங்களுக்கு திரும்பி வரும் போது இன்றும் (16) நாளையும் அதிவேக பாதைகளில் ஏற்படும் வாகன நெரிசல்களை சரிசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிவேக பாதையின் முகாமைத்துவப் பணிப்பாளர் எஸ்.ஓபநாயக்க தெரிவித்தார்.

இதற்காக வேண்டி குறிப்பிட்ட சில பிரவேச வாயில்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதிவேக பாதையில் பயணிக்கத் தகுதியற்ற வாகனங்களை அப்பாதையில் செலுத்துவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் சாரதிகளைக் கேட்டுக் கொண்டார்.

அதிவேக பாதையில் பயணிக்கும் சாரதிகள் பாதை சட்ட திட்டங்களை கருத்தில் கொண்டு செயற்படுமாறும் ஓபநாயக்க குறிப்பிட்டார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது இம்முறை அதிவேக பாதையில் புத்தாண்டு நாட்களில் ஏற்பட்ட விபத்துக்கள் குறைவாக காணப்படுவதாகவும் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.