தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே தமது நோக்கம்- மஹிந்த

198 0

இந்த அரசாங்கத்துக்குள் அங்கும் இங்கும் மாற்றம் ஏற்பட்டுப் பிரயோசனம் இல்லையெனவும், பெரிய ஒரு தேர்தலின் மூலம் முழு அரசாங்கத்தையும் மாற்றுவதே தமது நோக்கம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

தங்கல்லை, கால்டன் இல்லத்தில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

இந்த அரசாங்கம் புதுவருடம் ஒன்று வரும் போது தெரிந்து தெரிந்து பொருட்களுக்கான வரியை அதிகரித்தது. எப்போது வரியை அதிகரிக்க வேண்டும் என்பதை இந்த அரசாங்கம் கருத்தில் கொள்வதில்லை.

எமது அரசாங்க காலத்தில் சிங்கள, தமிழ் புத்தாண்டு மற்றும் நத்தார் காலம் என்பவற்றில் பொருட்களின் வரிகளை அதிகரிக்க வில்லையெனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.