நடிகர் ரயனுக்கு விளக்கமறியல்

336 0

டுபாயில் கைதுசெய்யப்பட்ட பிரபல பாதாள உலகக்குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு பிரபல நடிகர் ரயன் வான் ரூயனை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

டுபாயில் இருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட நடிகர்  ரயன், 18 மணிநேர விசாரணையின் பின்னர்  வெலிகம பொலிஸாரிடம்  ஒப்படைக்கப்பட்டார்.

இதன் பின்னர் அவர் பொலிஸாரால் மாத்தறை நீதிமன்ற நீதவான்  முன்னிலையில்  இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்நிலையில்  நடிகர் ரயன் வான் ரூயனை இம்மாதம் 11 ஆம் திகதி வரை விளக்கமறியில் வைக்குமாறு மாத்தறை நீதிமன்ற நீதவான்  உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை இவருடன் கைது செய்யப்பட்ட நால்வர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள்.