மன்னார் மறைமாவட்ட ஆயரை சந்தித்த பிரான்ஸின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர்

308 0

மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்கும், பிரான்ஸின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையில் விசே சந்திப்பு   நேற்று வியாழக்கிழமை மாலை  மன்னார் ஆயர் இல்லத்தில் இடம்பெற்றது.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் காணப்பட்ட மனித புதைக்குழி தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

ஆயருடான  கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட மாணவ மாணவிகளின் கல்வி வளர்சிக்கான உதவிகள் தொடர்பாகவும், இளைஞர், யுவதிகளுக்கான தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும், அபிவிருத்தி விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டுள்ளது.