
மக்களின் வாக்களிக்கும் அதிகாரத்தை இல்லாமல் செய்தது தற்போதைய அரசாங்கமே என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கம் ஜனநாயகத்தின் முதன்மை அடையாளத்தையே உடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாணந்துறை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.
தேர்தல் ஒன்றை கேட்டு நீதிமன்றத்துக்கு சென்றோம். எனினும் நீதிமன்றமும் தேர்தலை வழங்கவில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

