நாளை திறக்கப்படவுள்ள புதிய ரயில் நிலையம்

374 0

களனிவெளி ரயில் பாதையில் மாக்கும்புர பல்நோக்கு போக்குவரத்து நிலையத்துடன் இணைந்ததாக நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் நிலையம் நாளை அமைச்சர் அர்ஜூன ரணதுங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அர்ஜூன ரணதுங்க தலைமையில் இடம்பெறும் இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் நாளை முதல் களனிவெளி ரயில் பாதையில் புதிதாக இரண்டு ரயில் வண்டிகள் சேவையில் ஈடுபடுத்தப்படவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.