சிறைச்சாலை ஊழியர்களுக்கான விண்ணப்பம் கோரல்!

226 0

சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் மற்றும் புனர்வாழ்வு அதிகாரிகள் நியமனத்திற்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

இது தொடர்பாக வர்த்தமானி அறிவிப்பு இன்று வெளியிடப்பட இருப்பதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைவாக 1068 ஆண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 110 பெண் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் 2 ஆம் நிலை ஆண் ஜெயிலர் பதவிக்கும் பெண் ஜெயிலர் பதவிக்காக 10 பேரும் புனர்வாழ்வு ஆண் அதிகாரிகளாக 15 பேரும் பெண் புனர்வாழ்வு அதிகாரிகளாக மூவரும் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட உள்ளனர். 

அத்துடன் இப் பதவிக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்பட உள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.