இலங்கையின் நிலப்பரப்பிற்கு ஒத்த விஸ்தீரணத்தை மட்டுமே ஐ.எஸ் அமைப்பு தற்போது கொண்டுள்ளது.

355 0

05-1462433755-13fivedeadliestterroristorganizationsஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் 2015ஆம் ஆண்டில் இருந்த பிரதேசங்களில் 28 சத வீத நிலப்பரப்பை அவர்கள் தற்போது இழந்துள்ளதாக புதிய தரவுகள் தெரிவிக்கின்றன.

ஐ.எச்.எஸ். என்ற பாதுகாப்பு ஆய்வு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியினில் 78 ஆயிரம் கிலோ மீட்டர் நிலப்பரப்பை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த எஸ்.ஐ. அமைப்பினர். தற்போது 65 ஆயிரத்து 500 கிலோ மீட்டரையே தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

இது தற்போது முழு இலங்கையின் நிலப்பரப்பிற்கு ஒத்த விஸ்தீரணத்தை மட்டுமே கொண்டுள்ளதாக அந்த ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.