யாழ்ப்பாணத்தில் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கங்கை அமரன்

268 0

download-11தென்னிந்திய பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர்.

இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காகவே இவர்கள் அங்குச் சென்றுள்ளனர்.

கொழும்பை வந்தடைந்த இவர்கள் பின்னர் விசேட ஹெலிகப்டர் மூலம் யாழ்ப்பாணம் புனித அந்தோனியார் கோயிலிற்கு முன்னாலுள்ள மைதானத்தில் தரையிறங்கினார்கள்.

இவர்களை அதிகளவான ரசிகர்கள் வரவேற்ற நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் யாழ்ப்பாணத்தை சுற்றி பார்வையிட்டனர்.

இதனையடுத்து இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் எஸ்.நடராஜன் எஸ்.பி. பாலசுப்ரமணியம், கங்கை அமரன் ஆகியோரை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது.