புதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லை

363 0

bv7hpwzax5982cb90hmjபுதிய அரசியலமைப்பு வரையும் செயற்பாடு இதுவரை நிறைவு செய்யப்படவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகளையும் பிரதமர் அலுவலகம் நிராகரித்துள்ளது.இதேவேளை பௌத்தம் தொடர்பான சரத்துக்களை நீக்கவோ அல்லது திருத்தம்செய்யவோ இல்லை என்பதையும் வலியுறுத்தியுள்ளது.

ஜனாதிபதி முறைமை ஒழிப்பு, புதிய தேர்தல் கட்டமைப்பு மற்றும் மாகாணங்களுக்கிடையிலான அதிகாரப்பகிர்வு ஆகியன தொடர்பிலேயே கலந்துரையாடப்பட்டதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Leave a comment