மத்துகம- அளுத்கம பிரதான வீதியின் லெச்சந்துவ பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்து சுற்றுலா வந்த பஸ்வண்டி வீதியை விட்டு விலகி இவ்வாறு விபத்துக்குள்ளாகியதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் அளுத்கம, மத்துகம, நாகொட ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் அஹுங்கல பிரதேசத்தைச் சேர்ந்தவரென்றும், இந்த விபத்து தொடர்பில் வெலிப்பன்ன பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.