சுழற்சி முறையிலான மின்சார விநியோக தடையினை அமுல்படுத்த தீர்மானித்துள்ளதாக மின்சாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி நாள்தோறும் மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய காலை 08.30 தொடக்கம் 11.30 வரை அல்லது 11.30 தொடக்கம் 02.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது.
இதேவேளை மாலை 06.30 தொடக்கம் 07.30 வரை அல்லது 07.30 தொடக்கம் 08.30 வரை மின்சாரம் துண்டிக்கப்படக்கூடும் என மின்சாரதுறை அமைச்சு தெரிவித்துள்ளது.
நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக இலங்கை முழுவதிலும் சமீப காலமாக மின்சாரம் தடைப்பட்டு வருகின்ற நிலையில், மின்சாரம் துண்டிக்கப்படும் நேரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.