ஜெர்மனியில் பயங்கரவாத தாக்குதலுக்கு சதி; 10 பேர் கைது!

405 0

ஜெர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக அந்த நாட்டின் போலீஸ் படைக்கு உளவு தகவல் கிடைத்தது.

ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாகாணங்களில் பயங்கரவாதிகளை தேடும் வேட்டைகளை போலீசார் தீவிரமாக நடத்தினர்.

கார் மற்றும் துப்பாக்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தி பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படுத்த சதி செய்ததாக பிராங்பர்ட் நகர் அருகே உள்ள ஆபன்பேச் நகரில் 21 வயதான இளைஞர் ஒருவரும், ஒய்ஸ்பேடன் நகரில் 31 வயதான 2 சகோதரர்களும் கைது செய்யப்பட்டனர். மேலும் பல இடங்களில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.