கிளிநொச்சியில் சர்வதேச பெண்கள் தின நிகழ்வு

221 0

கிளிநொச்சி மாவட்ட பெண்கள் வாழ்வுரிமை கழகத்தின் ஏற்பாட்டில் சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

“பெண்களின் குரல்” எனும் தலைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில, அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாக 12 தலைப்புக்களில் கருத்துரைகளும் இடம்பெற்றன.

அத்தோடு காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் பெண்களாக எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பாகவும் கருத்துரைக்கப்பட்டது.