கடலில் நீராட சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

219 0

அம்பலங்கொட, அகுரல கடலில் நீராட சென்ற இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். 

குழுவொன்று கடலில் நீராடச் சென்றுள்ளதுடன், குறித்த இருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதனையடுத்து அவர்களை காப்பாற்றி பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அவர்கள் உயிரிழந்துள்ளனர். 

கரந்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயது இளைஞர் மற்றும் கஹவ பிரதேசத்தைச் ​சேர்ந்த 66 வயதுடைய ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் சடலம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், அம்பலாங்கொ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.