சிறிசேனவே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தவுக்கு ஆதரவு இல்லை – சுதந்திர கட்சி!

197 0

ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுன முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குமாயின் அதனுடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

பொது ஜன பெரமுனவுடன் இணைந்து நாம் கூட்டணி அமைத்தாலும் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையே வேட்பாளராக களமிறக்குவதில் நாம் உறுதியாகவுள்ளோம். 

எனினும் ஜனாதிபதி இது தொடர்பில் இது வரையில் உத்தியோகபூர்வமாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.