புத்தளம் முந்தல் தோட்டத்திலிருந்து சடலம் மீட்பு

207 0

புத்தளம் முந்தல் பொலிஸ் பிரிவுக்குற்பட்ட அம்பலவெளி சாந்த மைக்கல்வத்த தென்னந்தோட்டத்திலிருந்து  நேற்று வெள்ளிக்கிழமை (15) ஒருவர்  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மஹகும்புக்கடவல பகுதியைச் சேர்ந்த அமரசிங்க சிறில் ஜயராஜபூர ( வயது 69) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தோட்டம் ஒன்றில் இவ்வாறு சடலம் ஒன்று கிடப்பதாக முந்தல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, அங்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவரின் உடலைச் சுற்றி இரசாயன பதார்த்தங்கள் காணப்பட்டுள்ளதுடன், இரத்தக் கரைகளும் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகத்திற்கிடமான இந்த மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சடலம் கண்டெடுக்கப்பட்ட குறித்த தோட்டத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.