இழுபறி நிலையில் பொ.பெரமுன – சு.க. கூட்டணி-சாகர காரியவசம்

358 0

பொதுஜன பெரமுனவினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையிலான பரந்துப்பட்ட கூட்டமைப்பு தொடர்பில் முன்னெடுக்கின்ற பேச்சுவார்த்தைகளில் இணக்கப்பாடற்ற தன்மையே காணப்படுகின்றது. இதன் காரணமாக இழுப்பறி நிலைமை தொடர்கின்றது என பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளர்  சாகர காரியவசம் தெரிவித்தார்.

பரந்துப்பட்ட புதிய கூட்டணியமைத்தல் தொடர்பில்  இரண்டு தரப்பிலும் காணப்படுகின்ற  செயற்பாடுகள் தொடர்பில் வினவிய பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அத்துடன் புதிய கூட்டணி தொடர்பில் ஒரு  கலந்துரையாடல் இடம் பெறவுள்ளது. எவ்வாறாயினும் நாங்கள் ஒருபோதும் தலைமைத்துவத்தினதும், கட்சியின் மொட்டு சின்னத்தினையும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.  பலம்   வாய்ந்த ஒரு கட்சியின்  கருத்துக்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில் பொதுஜன பெனமுனவிற்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் இதன்போது குறிப்பிட்டார்.