துப்பாக்கியுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது

227 0

துப்பாக்கியை பயணப்பொதியில் மறைத்து வைத்து வெளிநாடு செல்ல முயன்ற பயணியொருவர் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நபர் லண்டன் நோக்கி செல்வதற்காக வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த சந்தேகநபர் அமெரிக்க குடியுரிமையை கொண்டவரெனவும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளுக்காக விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.