JVP – TNA சந்திப்பு இன்று

201 0

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கும் உத்தேச 20 ஆவது திருத்தச் சட்டமூலம் குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இன்று (11) பேச்சுவார்த்தை மேற்கொள்ளவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

ஜே.வி.பி. யின் கட்சித் தலைமையகத்தில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அக்கட்சியின் பிரச்சாரச் செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் நாட்களில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடனும், முஸ்லிம் அரசியல் கட்சிகளுடனும் இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடாத்த எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 6 ஆம் திகதி எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவுடன் முதலாவது கட்ட சந்திப்பை ஜே.வி.பி. நடாத்தியமை குறிப்பிடத்தக்கது.