கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்த நபர் ஒருவர் கைது

228 0

வெல்லவாய பகுதியில் கஞ்சாச் செடிகளை வளர்த்து வந்த ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றிய செல்பி புகைப்படமொன்றின் பின்னால் அவர் வளர்த்து வந்த கஞ்சா தோட்டம் தென்பட்டுள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு விசாரணைகளை நடத்தியே மேற்படி நபரை வெல்லவாய பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.