ஜேர்மன் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு அனுப்பும் துருக்கி !

285 0

மூன்று ஜேர்ம்ன் பத்திரிகையாளர்களை நாட்டை விட்டு துருக்கி அரசு வெளியேற்றுவதற்கு ஜேர்மன் வெளியுறவு துறை அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

துருக்கி அரசின் இந்த முடிவு ஏற்றுக்கொள்ள முடியாது என் அமைச்சர் Heiko Maas தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர்களிடம் நாட்டை விட்டு வெளியேற 10 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டன.

வெளிநாட்டு ஊடகவியலாளர்களின் அங்கீகாரத்தை முற்றிலுமாக நிராகரித்துள்ளது துருக்கி. துருக்கில் பத்திரிகை சுதந்திரம் மிகவும் கட்டுப்பாடுடன் உள்ளது. ஜூலை 2016 ல் தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அரசாங்கம் முக்கிய காரணம் என குற்றம்சாட்டிய துருக்கிய பத்திரிகையாளர்கள் டஜன் கணக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Thomas Seibert, Jörg Brase, Halil Gülbeyaz ஆகிய 3 பத்திரிகையாளர்களே நாட்டுக்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.