கோரிக்கைகளை முன்வையுங்கள், ஜெனீவாவில் சமர்ப்பிக்கின்றேன்-சுரேன் ராகவன்

305 0

ஜெனீவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் பொதுமக்கள் சார்பில் முன்வைக்கப்பட வேண்டிய கோரிக்கைள் எவையேனும் காணப்பட்டால் அவற்றை எழுத்து மூலமாக சமர்ப்பிக்க முடியும் என வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் ஜெனீவாவில் இடம்பெறும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டுமெனக் கருதும் தமது கோரிக்கைகளை பொதுமக்கள் அல்லது பொது அமைப்புக்கள் உள்ளிட்டோர் எதிர்வரும் 13 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெறவுள்ள ஆளுநரின் பொதுமக்கள் சந்திப்பின் போது எழுத்து மூலமாக நேரடியாகக் கையளிக்க முடியும்.