கேள்விக்கு பதிலளிக்காது நழுவிய ரவீந்ர விஜேகுணரத்ன

221 0

நான் பிணையில் உள்ள ஒரு சந்தேக நபர். என்னிடம் இவ்வாறான  கேள்விகளை கேட்டு என்னை மேலும் சிக்கலுக்குள் தள்ளாதீர்கள் என முப்படைகளின் அலுவலக பிரதனை அத்மிரால் ரவீந்ர விஜேகுணரத்ன கூறினார். 
பாதுகாப்பு ஊடக மத்திய நிலையத்தில் இடம்பெற்ற  ஊடகவியலாளர் சந்திப்பின்போது, தற்போது போர் குற்றம் தொடர்பில் பரவலாக பேசப்படும் நிலையில், அவற்றுக்கு எதிராக இலங்கையின் படையினரை பாதுகாக்கும் விதமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதை குறிப்பிட்டார்.