சிறந்த வரவு செலவு திட்டத்தை முன்வைத்துள்ளோம் – ராஜித

244 0

கடந்த 51 நாட்கள் அரசியல் புரட்சியொன்று உருவாகியிருக்காவிட்டால் இதனை விட சிறந்த வரவு -செலவு திட்டத்தை முன்வைத்திருபோம் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் வரவு செலவு திட்டம் மீதான முதல்நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த 51 நாட்கள் சூழ்ச்சியில் தான் நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. எனினும் இன்று நாம் அவை அனைத்தையும் தாண்டி சிறந்த வரவு செலவு திட்டம் ஒன்றினை  முன்வைத்துள்ளோம். இன்று நாம் பலமான அரசாங்கமாக உருவாகியுள்ளோம்.  கிராமங்களை பலப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் ஒன்றினை உருவாக்கி பலமான பயணம் ஒன்றினை உருவாக்கியுள்ளோம். இன்று பல நாடுகளில் இருந்து எமக்கு உதவிகள் கிடைத்துள்ளது. எமக்கு பொருளாதார நெருக்கடி ஒன்று இல்லை. அதனால் தான் இவ்வாறு மக்களுக்கான சலுகைகளை கொடுக்கும் வரவு செலவு திட்டத்தை நாம் உருவாக்கியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.