விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் OIC கைது

257 0

ரத்கம வியாபாரிகள் இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தென் மாகாண விஷேட விசாரணைப்பிரிவின் முன்னாள் நிலையப் பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

42 வயதுடைய இலேபெரும ஆரச்சிகே சமன் ரோஹன எனும் பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.