யாழில் இருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்லவிருந்த 22.6 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோ கஞ்சா மீட்பு (படங்கள் இணைப்பு)

423 0

K800_image-0.02.01.0ab55dd4ec800ac17897e36d8e17b45ef4195439cf07bdc355e73d7ea7ced9f8-Vஇந்தியாவில் இருந்து கடர்வழியாக யாழ்ப்பாணத்திற்கு கடத்திவரப்பட்ட 22.6 மில்லியன் ரூபா பெறுமதியான 90 கிலோவும் 519 கிராம் நிறையுடைய கேரளாக் கஞ்சா பொதிகளை அச்சுவேலி வளலாய் பகுதியில் வைத்து விசேட அதிரடிப் படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா பொதிகளை அச்சுவேலிப் பொலிஸாரிடம் இன்று காலை ஒப்படைத்துள்ளதாகவும் அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தமக்கு கிடைத்த இரகசிய தகவலினை அடுத்து குறித்த பகுதியில் இரகசியமான முறையில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த வேளையே குறித்த கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டள்ளது. மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள் அனைத்தும் யாழ்ப்பாண்தில் இருந்து கொழும்பிற்கு கடத்திச் செல்வதற்கான மறைத்து வைக்கப்பட்டிருந்த போதே அது மீட்கப்பட்டுள்ளது என்றும் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்துள்ளனர்.

K800_image-0.02.01.7e8a8ccfd050f14b60df7af67b7b59cb55ad91ac7f2ca7f361593cab0a9b62f0-V K800_image-0.02.01.73c483af22d916df9590e8a7a9e01e085433a83d67f5c94377429ce44259ab2a-V K800_image-0.02.01.229b4df96230623036790f7d376c2d282c07ceea9b79d5a7e0ce3c75ed284e08-V

Leave a comment