சுவிசில் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்ற ‘எழுச்சிக்குயில் 2016″

3574 0

026ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தடங்கள், வீரவரலாறுகள், தியாகங்கள், அர்ப்பணிப்புக்கள் உயிர்ப்புடன் இருக்க தங்களையே அர்ப்பணித்து விடுதலைப் போராட்டத்திற்கு வலுச்சேர்த்த அனைத்துக் கலைஞர்களினதும் நினைவுகளைச் சுமந்து நடாத்தப்பட்ட தமிழீழ எழுச்சிப்பாடல் போட்டியான ‘எழுச்சிக்குயில் 2016″ நிகழ்வானது 25.06.2016 சனிக்கிழமை அன்று சொலத்தூர்ன் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரின் ஆதரவில் தமிழர் நினைவேந்தல் அகவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டி நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், தமிழீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து அகவணக்கத்துடன் நிகழ்வுச்சுடரினைத் தொடர்ந்து போட்டி நிகழ்வுகள் ஆரம்பமாகின.

027

இளைய தலைமுறையினரிடம் தாயகம் சார்ந்த இன உணர்வை பேணவும், வீரவரலாற்றை நினைவு கொள்ளவும், புலம்பெயர்ந்து வாழும் நம்மவர்களின் திறமைகளை ஊக்குவித்து கௌரவிக்கும் முகமாகவும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் நிகழ்வில் பங்குபற்றி சிறப்பித்த நடுவர்கள், போட்டியாளர்கள், எழுச்சி இசை வழங்கிய கலை பண்பாட்டுக்கழக கலைஞர்கள், அறிவிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரையும் தேசியச் செயற்பாட்டாளர்கள் அனைவரும் இணைந்து செங்கம்பளம் விரித்த நுழைவாயிலினால் மண்டபத்திற்குள் அழைத்து வரும்போது இருமருங்கிலும் சிவப்பு மஞ்சள் கொடிகளை ஏந்திய மக்கள் உற்சாகமளித்த காட்சி நிகழ்வின் மகுடம்.

025

மூன்றாவது தடவையாக காந்தள் எழுச்சிக்குயில், செண்பகம் எழுச்சிக்குயில், வாகை எழுச்சிக்குயில், சிறுத்தை எழுச்சிக்குயில், வளர்ந்தோர் எழுச்சிக்குயில், இணை எழுச்சிக்குயில் போன்ற பிரிவுகளாக நடாத்தப்பட்ட போட்டிகளில் ஆர்வத்தோடு பங்குபற்றிய எழுபதிற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் மொழியாற்றலுடனும், இசையறிவுடனும், உணர்வுடனும் எழுச்சிப்பாடல்களைப் பாடிய பாடகர்களுடன், இசைக்கலைஞர்களும் மக்கள் மனதை கொள்ளை கொண்டதுடன் நிகழ்விற்கு வருகை தந்திருந்த சுவிஸ் வாழ் தாயகக் கலைஞர்களுக்கும் சிறப்புப்பரிசளித்து மதிப்பளிக்கப்பட்டனர்.

024

போட்டியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்று ‘எழுச்சிக்குயில் 2016″ விருதையும், தமிழின அழிப்பின் அவலங்களைத் தாங்கி தமிழகத்தின் தஞ்சையில் அமைந்திருக்கும்; ‘முள்ளிவாய்க்கால் நினைவுமுற்றம்” சென்று தரிசிப்பதற்கான விமானப்பயணச்சீட்டையும் ‘ஒன்றல்ல ரெண்டல்ல நூறாயிரம்” என்ற தமிழீழ எழுச்சிப்பாடலை பாடிய செல்வி அஐpத்தா விஐயகுமார் அவர்கள் மண்டபம் அதிர்ந்த கரவொலியோடு தனதாக்கிக் கொண்டார்.

023

நிகழ்வில் பங்குபற்றிய அனைவருக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், ஓவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக்கேடயங்கள் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் பாடலுடன் தமிழீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டு, தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் சிறப்பாக நிறைவுபெற்றன.

இப்போட்டி நிகழ்வை வெற்றிகரமாக நடாத்த அனைத்து வகைகளிலும் முழு ஒத்துழைப்பு நல்கிய அனைத்துப் பெற்றோர்கள் போட்டியாளர்கள், அனுசரணையாளர்கள், ஆதரவாளர்கள், இனஉணர்வாளர்கள், சக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து எமது உறவுகளையும் நன்றியன்போடு பாராட்டுதல்களையும், வாழ்த்துக்களையும் இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு

022 021 020 019 018

Leave a comment