கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

219 0

வடக்கு கடற்படை கட்டளை தலைமையக அதிகாரிகள் மற்றும் மன்னார் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட விஷேட கண்கானிப்பு நடவடிக்கையின்போது 42.3 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 
மன்னார், புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.