ரத்கம சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

211 0

ரத்கம – உதாகம பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர்கள் இருவர் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

முறைப்பாடின்றி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கூறியுள்ளது. 

மாத்தறை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அலுவலகத்தின் ஊடகா இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ளது. 

இந்த சம்பவம் தொடர்பில் எந்த தரப்பினரும் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை என்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது. 

யாராவது முறைப்பாடு செய்தால் அது சம்பந்தமாக மற்றொரு விசாரணை ஆரம்பிக்கப்படும் என்று மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.