கஞ்சிபானை இம்ரானின் பிரதான துப்பாக்கி சுடுநர் கைது

206 0

பாதாள உலகக் குழுத் தலைவரான மாகந்துரே மதூஷுடன் டுபாயில் கைதுசெய்யப்பட்டுள்ள பாதாள குழு உறுப்பினர் கஞ்சிபான இம்ரானின் பிரதான துப்பாக்கி சுடுநர் கைது செய்யப்பட்டுள்ளார். 

கொழும்பு ஜம்பட்டா வீதி பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேனர தெரிவித்துள்ளார். 

அப்துல் கபூர் ரிஸ்வான் என்ற நபரே ஒரு கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் கைக்குண்டு ஒன்றுடனும் கைதாகியுள்ளார். 

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற 04 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களுடன் சந்தேகநபருக்கு தொடர்பு இருப்பதாகவும், எனினும் அந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் எவரும் உயிரிழக்கவில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேனர தெரிவித்துள்ளார்