பத்தளை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட ஊவாகல தோட்டத்தில் 3ஆம் பிரிவிலுள்ள வனப்பகுதியில் இனந்தெரியாத 28 வயது மதிக்கதக்க ஆண் ஒருவரின் சடலம் நீரோடையில் கிடந்ததை தோட்டமக்கள் கண்டுள்ளயனர்.
இதனையடுத்து பத்தனை பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து அங்கு சென்ற பத்தன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் பொலிஸார் பார்வையிட்டனர்.
இது குறித்து பத்தன பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவிக்கையில்,
குறித்த இளைஞர் இறந்து சுமார் 7 நாட்களுக்கு மேல் இருக்கலாம் அவர் சிவப்பு நிற சேட் மற்றும் கருப்பு நிற காட்சட்டையும் அணிந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் இன்று 20 ஆம் திகதி ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் மேலதிக நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார்.
சம்பவம் நடந்த இடத்தில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.