மார்ச் 7 வரை முறைப்பாடுகளை கையளிக்கலாம்!

204 0

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் தமது ஆணைக்குழுவில் முன்வைக்குமாறு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளில் பெரும்பாலானவை தொடர்பற்ற முறைப்பாடுகளாக காணப்படுவதன் காரணமாக, அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் மேற்கொள்ளுமாறு, ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.

முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி, அடுத்த மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவுபெறுவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.