ஏரியில் குளித்து கொண்டிருந்த காதலர்கள் நீரில் மூழ்கி பலி..!

228 0

புத்தளத்தில், நேற்று மாலை , இளம் காதலர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்த போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

புத்தளம், நவத்தேகம, வெலேவெவ பிரதேசத்தில் உறவினர்கள் வீட்டிற்கு சென்றிருந்த காதலர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

வென்னப்புவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞன் மற்றும் 17 வயதான யுவதியுமே நீரில் மூழ்கியுள்ளனர்.

உயிரிழந்த இருவரும் தங்கள் வீடுகளுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளுமு் நோக்கில் உறவினர்களின் வீட்டிற்கு சென்றிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த 17 வயதான யுவதி காணாமல் போயுள்ளதாக அவரது பெற்றோர் மாரவில, கொஸ்வத்தை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளதொடு, உயிரிழந்த இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்திருக்க கூடும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்கள் மாலை வேளையில் குளிக்க சென்ற போது, இளம் பெண் முதலாவதாக ஏரியில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற முற்பட்டபோதே குறித்த இளைஞனும் நீரில் முழ்கி மரணித்துள்ளதாக தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளது.