மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

316 0

முல்லைத்தீவு கொக்குளாய் வீதியில் செம்மலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

நேற்று (17) மாலை 2.30 மணியளவில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்டத்தில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதது. 

இதன்போது இருவர் படுகாயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் ஒருவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செம்மலை பகுதியினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான செ.பாஸ்கரன் என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.