கஞ்சா தோட்டத்தை பயிரிட்ட ஒருவர் கைது

209 0

கொஸ்லந்த, மஹலந்த அம்பகொலஆர காட்டுப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா தோட்டம் ஒன்றை சுற்றி வளைத்து பொலிஸார் சந்தேக நபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர். 

குறித்த கஞ்சா தோட்டத்தில் 9 அடி உயரமான 2000 பயிர்கள் இருந்ததாகவும் அவற்றில் ஒரு பகுதியை வழக்கு பொருளாக வைத்துக் கொண்டதுடன் ஏனையவற்றை அழித்தாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

தனமல்வில, பலஹருவ பகுதியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைத செய்யப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பில் கொஸ்லந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.