வெளிநாட்டு மதுபான போத்தல்களுடன் ஒருவர் கைது!

220 0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சொகுசு மெத்தையில் மறைக்கபட்டு சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு கொண்டுவரப்படும் மதுபான போத்தல்கள் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

மாரவில – முதுகடுவ பிரதேசத்தில் நேற்றைய தினம்  சுங்க பிரிவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 111 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டதோடு சந்தேக நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

இந்நிலையில், இத்தாலியில் உள்ள நபர் ஒருவரினால் குறித்த மதுபான வியாபாரம் நீண்ட காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்தள்ளமை தெரியவந்துள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.