மக்கள் சக்தியாக உருவாக்கப்பட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைக்க முடியாது – செல்வம்

245 0

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் டெலோ கட்சியானது பேரவையுடன் இணைந்திருந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு இன்று இல்லை என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம்  அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (டெலோ) கட்சியின் மன்னார் மாவட்ட இளைஞர் அணி மாநாடு  மற்றும் இளைஞர் அணியின் நிர்வாக தெரிவு இன்று வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று வரை தன்னகத்தே சரியான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது.

மூன்று கட்சிகன் இன்று வரை அந்த கட்சியிலே இருந்து கொண்டிருக்கின்றன.

நாங்கள் பேரவையுடன் இணைந்திருக்க முடியும். தமிழீழ விடுதலை இயக்கம் பேரவையுடன் இணைந்திருந்தால் தமிழ் தேசியக்கூட்டடைப்பு இன்றைக்கு இல்லை.

தமிழ் தேசியக்கூட்டமைப்பை உறுவாக்கினவர்கள் என்ற நிலையிலே தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்குள் பிரச்சினைகள் எழுந்தாலும் அதனை தக்க வைக்க வேண்டும் என்ற உணர்வோடு செயற்படுகின்ற கட்சியாக நாங்கள் செயற்படுகின்றோம்.

எமது மக்களின் சக்தியாக இன்றைக்கு விடுதலைப்புலிகளின் அமைப்போடு உறுவாக்கப்பட்ட தமிழ் தேசியக்கூட்டமைப்பை யாராலும் உடைக்க முடியாது. எங்களுடைய மக்களின் விடுதலை என்ற நோக்கத்திற்காகவே தமிழ் தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆகவே நாங்கள் அதன் ஊடாக பயணிக்க வேண்டும்.

இன்று தமிழ் தேசியக்கூட்டமைப்பைச் சுற்றி எத்தனை எதிரிகள். சிங்கள சக்திகள் எங்களுடைய எதிரிகள் என்று பார்த்தால் தமிழ் தரப்பும் உள்ளது.இன்றைக்கு ஒவ்வொருவறும் கட்சிகளை ஆரம்பிக்கின்றார்கள்.

அவர்களின் பேச்சைப் பார்த்தால் தென் இலங்கையை அவர்கள் தாக்குவது இல்லை. இராணுவத்தை தாக்கி கதைப்பது இல்லை. அரசாங்கத்தை பாரிய அளவில் விமர்சிப்பது இல்லை.ஆனால் அவர்கள் விமர்சனம் செய்கின்ற ஒரே ஒரு கட்சி தமிழ் தேசியக்கூட்டமைப்பு தான்.

ஆனால் நாங்கள் என்றைக்கும் விலை போனவர்கள் இல்லை.

இன்றைக்கு அதனை பலவீனப்படுத்துகின்ற வகையிலே எங்களுக்குள் நாங்கள் பிளவு பட்டுள்ளோம். நான் ஒன்றை ஏற்றுக்கொள்ளுகின்றேன். தமிழ் தேசியக்கூட்டமையில் ஒரு சிலர் கதைக்கின்ற விடையங்கள் தமிழ் தேசியக்கூட்டமைப்பை பலவீனப்படுத்துவதாக அமைகின்றது.எதிரிகளுக்கு வாய்ப்பையும் கொடுக்கின்றது.

அனாவசியமான போச்சுக்களை பேச வேண்டாம் என்று சம்மந்தப்பட்டவர்களிடம் கூறி வருகின்றோம்.

இந்த நாட்டிலே வாழுகின்ற ஒரு தமிழன் இந்த நாட்டிலே வாழ்வதற்கான அனைத்து உரிமைகளும் எங்களுக்கு இருக்க வேண்டும் என்று நினைக்கின்ற போது தான் சுதந்திரத்தை அடைந்து விட்டேன் என்ற சந்தர்ப்பம் வருகின்ற போது தான் அந்த சுதந்திரத்தை அனுபவிக்க முடியும்.

ஆகவே இந்த நாடு சுதந்திரம் அடைந்திருக்கின்றது.

ஆகவே அந்த நாளை நான் சந்தோசமாக கொண்டாடுகின்றேன் என்ற சிந்தனை எப்பாது அவனுக்கு எழுகின்றதோ, அப்போது தான் அதனை கொண்டாட முடியும். என அவர் மேலும் தெரிவித்தார்.