தமிழரின் உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள். -கிரியெல்ல

345 0

அரசியல் அமைப்பில் தமிழரின் உரிமைகள்  வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் எக்காரணம் கொண்டும் ஆயுதமேந்தியிருக்க மாட்டார்கள்.

 சகல மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  அரசியல் அமைப்பினை உருவாக்கி  தீர்வுகளை பெற்றுக்கொடுக்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே உள்ளது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பழைய முறைமையில் தேர்தலை நடத்த இணக்கம் தெரிவித்திருந்தால்  இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே மாகணசபை தேர்தலை நடத்தியிருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

கண்டியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அமைச்சர் இந்த காரணிகளை கூறியிருந்தார்.

Leave a comment