வெளிநாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

339 0

ஹிங்குரான்கொட பகுதியில்  வெளிநாட்டு  தயாரிப்பு  கைத்துப்பாக்கியுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹிங்குரான்கொடை  பொலிஸ் நிலைய  பொறுப்பதிகாரி  தெரிவித்தார்.  

குறித்த கைது நடவடிக்கை இன்று முற்பகல்  11மணியளவில் இடம் பெற்றுள்ளதுடன் , சந்தேக நபரின் வீட்டிலிருந்தே மேற்படி இத்தாலிய நாட்டு தயாரிப்பு  கைத்துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது. 

சந்தேக நபர்  30 வயதுடைய ஹிங்குரான்கொடை  பகுதியை சேர்ந்த  பிரசாத் பத்மகுமார என விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளதுடன், சந்தேக நபரை  நாளைய தினம்  ஹிங்குரான்கொடை நீதவான்நீதி  மன்றத்தில்  ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார்  மேற்கொண்டு வருகின்றனர். 

இதேவேளை, ஹிங்குரான்கொடை பொலிசார்  மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  

Leave a comment