சமிந்த விஜேசிறிக்கு பிணை

5641 0

பண்டாரவளை நீதிவான் நீதிமன்றில் இன்று சரணடைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறியை பிணையில் செல்ல நீதிபதி அனுமதித்தார்.

கடந்த 10 ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, தமது வாகனத்திற்கு வழிவிடவில்லை என்ற காரணத்தினால் முன்னால் சென்ற பொலிஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தி அதில் இருந்த பொலிஸ் கான்ஷ்டபில் ஒருவரை தாக்கியதுடன் தலைமறைவாகியிருந்தார்.

இந்த சம்பவம் தொடர்பில் சமிந்த விஜேசிறியுடைய வாகனத்தின் சாரதி  கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பொலிசாரினால் தேடப்பட்டு வந்த பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி, சட்டத்தரணி சன்ஜீவ விஜயசேக்கர தலைமையிலான சட்டத்தரணி குழுவினருடன் இன்று பண்டாரவளைப் பொலிஸ் நிலையத்தில் முற்பகல் 11 மணியளவில் சரணடைந்தார்.

இதையடுத்து நீதிவான் அவர்கள் இருவரையும் தலா ஐந்து இலட்சம் ரூபா என்ற அடிப்படையில் சரீரப் பிணையிலும், தலா 10 ஆயிரம் ரூபா என்ற அடிப்படையில் ரொக்கப் பிணையிலும் விடுதலை செய்ய அனுமதி வழங்கினார்.

Leave a comment