பருத்தித்துறை வீதியில் கோர விபத்து

6821 0

பருத்தித்துறை வீதி, அச்சுவேலிப் பகுதியில்   இடம்பெற்ற கோர விபத்தில் தனியாருக்குச் சொந்தமான ஹயேஸ் ரக வாகனம் ஒன்று வீதியை விட்டுத் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், வாகன சாரதி எவ்வித காயங்களுமின்றி உயிர் தப்பியுள்ளார்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பருத்திதுறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment