பண மோசடி செய்த பெண் ஒருவர் கைது

216 0

வெளிநாட்டில் தொழில் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் ஹொரணை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். 

பாணந்துறை வலய சட்டத்தை அமுலாக்கும் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் கூறியுள்ளது. 

நியூஸிலாந்தில் தொழில் பெற்றுத் தருவதாக தெரிவித்து பெறப்பட்ட 02 இலட்சத்து 95,000 ரூபா பணம் மற்றும் 40 கடவுச்சீட்டுக்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

ஹொரணை, பொகுணுவிட்ட பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது பெண் ஒருவரே கைதாகியுள்ளார். 

சந்தேகநபர் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Leave a comment